தமிழே உயிரே தரமுடைய வாழ்வருளும்
அமிழ்தே ஆரணங்கே அழகுடைய நின்கனிவாய்
உமிழ்ந்த ஓர்துளியும் உவமையிலாத் தேனாகி
கமழும் புகழ்படைக்கும் கன்னிநீ வாழியவே
வாழிநீயெந்தாய் வையங்கள் உள்ளவரை
ஆழியின் முத்துடைத்த அருபாண்டியர் மடிதவழ்ந்து
மேழைச் சோழரிடம் மெல்ல நடைபயின்று
கீழை சேரர்தம் கிளர்மொழியில் ஆளானாய்
ஆய்கின்ற புலவோர்க்கு அருமருந்தே நிதமும்
தேய்கின்ற மனத்திற்கு தெள்ளமுதே உலகுக்கு
வேய்கின்ற பெரும்பொருள் விழிக்கு பெருந்துணையே
தாய்கொண்ட பேரன்பில் தனியின்பம் விளைப்பவளே
விளைகின்ற கவிப்பொழிவில் வித்திடும் கலைமகளே
திளைக்கின்ற தெள்ளமுதாய் திரைகடல்கள் பலகடந்தும்
நிலைகொண்ட பெரும்புகழே நின்திறனை போற்றுதுமே
கலைகொண்ட வாழ்வதனை கவினோடு எனக்கருள்க
அன்புடன்
முனைவர்.க.சங்கரநாராயணன்
தமிழே உயிரே..!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment